1. காரிருளில், என் நேச தீபமே, நடத்துமேன்;
Christian Song Lyrics
Tamil1. Kaarirulil, en naesa theepamae, nadaththumaen;
Vaeroliyillai, veedum thooramae, nadaththumaen;
Neer thaangin, thoorakkaatchi aasiyaen;
Or ati mattum en mun kaattumaen.
2. En ishdappati nadanthaen, aiyo! Munnaalilae;
Oththaasai thaedavillai; ippotho nadaththumaen;
Ullaasam naatinaen, thikililum
Veempu konntaen, anpaaka manniyum.
3. Immattum ennai aaseervathiththeer; inimaelum
Kaadaaraு seraு kuntil thaevareer nadaththidum;
Uthaya naeram vara, kalippaen;
Marainthu pona naesaraik kaannpaen
1. காரிருளில், என் நேச தீபமே, நடத்துமேன்;
வேறொளியில்லை, வீடும் தூரமே, நடத்துமேன்;
நீர் தாங்கின், தூரக்காட்சி ஆசியேன்;
ஓர் அடி மட்டும் என் முன் காட்டுமேன்.
2. என் இஷ்டப்படி நடந்தேன், ஐயோ! முன்னாளிலே;
ஒத்தாசை தேடவில்லை; இப்போதோ நடத்துமேன்;
உல்லாசம் நாடினேன், திகிலிலும்
வீம்பு கொண்டேன், அன்பாக மன்னியும்.
3. இம்மட்டும் என்னை ஆசீர்வதித்தீர்; இனிமேலும்
காடாறு சேறு குன்றில் தேவரீர் நடத்திடும்;
உதய நேரம் வர, களிப்பேன்;
மறைந்து போன நேசரைக் காண்பேன்