ஓடி வா ஜனமே
Christian Song Lyrics
TamilOti vaa janamae Kristhu vanntaik
Kotivaa janamae – panntikai konn
Daativaa janamae avar paathaththaith
Thaetivaa janamae
Anupallavi
Needu samar puri koti alakaiyai
Nikrakiththu vaal pitiththa
Ukra manuvaelanaik kanndu – oti
Saranangal
Naernthatikal thuthiththu – nithya jepaththil
Neethith thavangal kathiththu
Serntharulai mathiththu sothikkach seytha
Theeya sarppaththai mithiththu aniththiyamaana
Jeka jaalaththaip panniththu
Akath thaakramaththai vittu
Thittamaaka nintu paththuk
Karpanaip patiyae sentu
Thaeva thunthumi mulanga sangaீthangalum
Paa vinangalum vilanga athan oliyaal
Anndamum kulunga para manndalangalum ilanga
Aaraathanaikal seythu seeraay nadanthukonndu
Ariya param porul oruvanai nenjakam
Uruki nadam seythu perukiya anpudan – oti
Njaanasnaanam pettaுch suruthi noolin
Maenmaich saasthiram kattaு
Eenap paavikal kattaு maayangal akki
Yaanak kirayaikal attaு maangishaththin
Irulaantha kaaram neengi arulaananthangal ongi
Ishdamaay nadan thelaarkkum thushdaththanap pollaarkkum
Yaesu naesaththaich sootti manokaraththaal
ஓடி வா ஜனமே கிறிஸ்து வண்டைக்
கோடிவா ஜனமே – பண்டிகை கொண்
டாடிவா ஜனமே அவர் பாதத்தைத்
தேடிவா ஜனமே
அனுபல்லவி
நீடு சமர் புரி கோடி அலகையை
நிக்ரகித்து வாள் பிடித்த
உக்ர மனுவேலனைக் கண்டு – ஓடி
சரணங்கள்
நேர்ந்தடிகள் துதித்து – நித்ய ஜெபத்தில்
நீதித் தவங்கள் கதித்து
சேர்ந்தருளை மதித்து சோதிக்கச் செய்த
தீய சர்ப்பத்தை மிதித்து அநித்தியமான
ஜெக ஜாலத்தைப் பணித்து
அகத் தாக்ரமத்தை விட்டு
திட்டமாக நின்று பத்துக்
கற்பனைப் படியே சென்று
தேவ துந்துமி முழங்க சங்கீதங்களும்
பா வினங்களும் விளங்க அதன் ஒலியால்
அண்டமும் குலுங்க பர மண்டலங்களும் இலங்க
ஆராதனைகள் செய்து சீராய் நடந்துகொண்டு
அரிய பரம் பொருள் ஒருவனை நெஞ்சகம்
உருகி நடம் செய்து பெருகிய அன்புடன் – ஓடி
ஞானஸ்நானம் பெற்றுச் சுருதி நூலின்