சபையின் அஸ்திபாரம்
Christian Song Lyrics
Tamil1. Sabaiyin asthipaaram
Nam meetpar Kristhuvae
Sabaiyin janmaathaaram
Avarin vaarththaiyae
Tham manavaattiyaaka
Vanthathaith thaetinaar,
Thamakkuch sonthamaaka
Mariththathaik konndaar.
2. Eththaesaththaar sernthaalum
Sabai onte ontam
Orae visvaasaththaalum
Orae ratchippunndaam
Orae theyveeka naamam
Sabaiyai innaikkum
Or thivviya njaanaakaaram
Paktharaip poshikkum.
3. Puraththiyaar virotham
Payaththai uraுththum
Ullaanavarin thurokam
Kilaesappaduththum
Pakthar oyaatha saththam,
“emmattum” enpathaam
Raavil nilaiththa thukkam
Kaalaiyil kalippaam.
4. Maelaana vaana kaatchi
Kanndaaseervaathaththai
Pettaு, por oynthu vetti
Siranthu, maatchimai
Ataiyum pariyantham
Innaa ulaippilum,
Neengaatha samaathaanam
Meych Sabai vaanjikkum.
1. சபையின் அஸ்திபாரம்
நம் மீட்பர் கிறிஸ்துவே
சபையின் ஜன்மாதாரம்
அவரின் வார்த்தையே
தம் மணவாட்டியாக
வந்ததைத் தேடினார்,
தமக்குச் சொந்தமாக
மரித்ததைக் கொண்டார்.
2. எத்தேசத்தார் சேர்ந்தாலும்
சபை ஒன்றே ஒன்றாம்
ஒரே விஸ்வாசத்தாலும்
ஒரே ரட்சிப்புண்டாம்
ஒரே தெய்வீக நாமம்
சபையை இணைக்கும்
ஓர் திவ்விய ஞானாகாரம்
பக்தரைப் போஷிக்கும்.
3. புறத்தியார் விரோதம்
பயத்தை உறுத்தும்
உள்ளானவரின் துரோகம்
கிலேசப்படுத்தும்
பக்தர் ஓயாத சத்தம்,
“எம்மட்டும்” என்பதாம்
ராவில் நிலைத்த துக்கம்
காலையில் களிப்பாம்.
4. மேலான வான காட்சி
கண்டாசீர்வாதத்தை
பெற்று, போர் ஓய்ந்து வெற்றி
சிறந்து, மாட்சிமை
அடையும் பரியந்தம்
இன்னா உழைப்பிலும்,
நீங்காத சமாதானம்
மெய்ச் சபை வாஞ்சிக்கும்.