மாராநாதா அல்லேலூயா
Christian Song Lyrics
TamilMaaraanaathaa Alleluya
Yesuraajaa varappokiraar
Alleluya paati thuthiththidu
Aaravaaram seythu makilnthidu
Kotik koti thootharodu paadiduvomae
Jeevan mooppar koottaththodu thuthiththiduvomae
Jeevan thanthu meettavaraik kanndiduvomae
Jeevanullor thaesaththilae makilnthiduvomae
Kavalaiyillaa thaesamathu, kannnneerillaa thaesamathu
Karththarodu vaalkinta thaesamathu
Palingu nathiyin oraththilae paadiduvomae
Parisuththar koottaththodu aaraathippomae
Paasamulla naesar maarpil ilaippaaraுvom
Paadukalai maranthu angae aatippaaduvom
Yesuvukkaay vaalnthavarkku palan kitaikkumae
Yesuvodu vaalvatharku kirupai kitaikkumae
Sooriyanum santhiranum angae illaiyae
Jeeva Dhevan oliyaaka pirakaasippaarae
மாராநாதா அல்லேலூயா
இயேசுராஜா வரப்போகிறார்
அல்லேலூயா பாடி துதித்திடு
ஆரவாரம் செய்து மகிழ்ந்திடு
கோடிக் கோடி தூதரோடு பாடிடுவோமே
ஜீவன் மூப்பர் கூட்டத்தோடு துதித்திடுவோமே
ஜீவன் தந்து மீட்டவரைக் கண்டிடுவோமே
ஜீவனுள்ளோர் தேசத்திலே மகிழ்ந்திடுவோமே
கவலையில்லா தேசமது, கண்ணீரில்லா தேசமது
கர்த்தரோடு வாழ்கின்ற தேசமது
பளிங்கு நதியின் ஓரத்திலே பாடிடுவோமே
பரிசுத்தர் கூட்டத்தோடு ஆராதிப்போமே
பாசமுள்ள நேசர் மார்பில் இளைப்பாறுவோம்
பாடுகளை மறந்து அங்கே ஆடிப்பாடுவோம்
இயேசுவுக்காய் வாழ்ந்தவர்க்கு பலன் கிடைக்குமே
இயேசுவோடு வாழ்வதற்கு கிருபை கிடைக்குமே
சூரியனும் சந்திரனும் அங்கே இல்லையே
ஜீவ தேவன் ஒளியாக பிரகாசிப்பாரே