ஆ இன்ப கால மல்லோ
Christian Song Lyrics
TamilAa inpa kaala mallo jepavaelai
Pallavi
Aa! Inpa kaala mallo-jepavaelai
Aanantha kaalamallo?
Anupallavi
Poovin kavalaikal pokki en aasaiyaip
Ponnula kaathipan munnae konntaekidum. – aa!
Saranangal
1. Thunpam thuyar neekki,-pollaangan-sothanaikal pokki,
Ampara vaasikalo-tithayaththai-inpa uravaakki,
Kempeeramaakavae thampiraan aasanam
Kitti makilvudanuttaு varach seyyum. – aa!
2. Jeeva aaraுthal pettaு,-piskaavin-sikaramathanil uttaு,
Thaeva nakar kannnuttaுch-sadalaththai-jekaththil erinthuvittu,
Aavi kalippudan aakaayanj sellavae,
Anpodu paarththu nal vanthananj solluvaen. – aa!
ஆ இன்ப கால மல்லோ ஜெபவேளை
பல்லவி
ஆ! இன்ப கால மல்லோ-ஜெபவேளை
ஆனந்த காலமல்லோ?
அனுபல்லவி
பூவின் கவலைகள் போக்கி என் ஆசையைப்
பொன்னுல காதிபன் முன்னே கொண்டேகிடும். – ஆ!
சரணங்கள்
1. துன்பம் துயர் நீக்கி,-பொல்லாங்கன்-சோதனைகள் போக்கி,
அம்பர வாசிகளோ-டிதயத்தை-இன்ப உறவாக்கி,
கெம்பீரமாகவே தம்பிரான் ஆசனம்
கிட்டி மகிழ்வுடனுற்று வரச் செய்யும். – ஆ!
2. ஜீவ ஆறுதல் பெற்று,-பிஸ்காவின்-சிகரமதனில் உற்று,
தேவ நகர் கண்ணுற்றுச்-சடலத்தை-ஜெகத்தில் எறிந்துவிட்டு,
ஆவி களிப்புடன் ஆகாயஞ் செல்லவே,
அன்போடு பார்த்து நல் வந்தனஞ் சொல்லுவேன். – ஆ!