ஆறுதலின் தெய்வமே
Christian Song Lyrics
TamilAaraுthalin theyvamae
Ummutaiya thiruch samookam
Evvalavu inpamaanathu
Ummutaiya sannithiyil thangiyiruppor
Unnmaiyilae paakkiyavaankal
Thooya manathudan thuthippaarkal
Thuthiththuk konntiruppaarkal – Amen
Ummilae pelan kollum manitharkalellaam
Unnmaiyilae paakkiyavaankal
Otinaalum kalaippataiyaar
Nadanthaalum sorvataiyaar -Amen
Kannnneerin paathaiyil nadakkum pothellaam
Kalippaana neeroottaாy maattik kolvaarkal
Vallamai maelae vallamai konndu
Seeyonaik kaannpaarkal -Amen
Vaeridaththil aayiram naal vaalvathai vida
Ummidaththil oru naal maelaanathu
Ovvoru naalum umathu illaththin
Vaasalil kaaththiruppaen – Amen
Aaththumaa thaevanae ummaiyae Nnokki
Aarvamudan katharaுkintathu
Ullamum udalum ovvorunaalum
Kempeeriththu saththamiduthu – Amen
ஆறுதலின் தெய்வமே
உம்முடைய திருச் சமூகம்
எவ்வளவு இன்பமானது
உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர்
உண்மையிலே பாக்கியவான்கள்
தூய மனதுடன் துதிப்பார்கள்
துதித்துக் கொண்டிருப்பார்கள் – ஆமென்
உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம்
உண்மையிலே பாக்கியவான்கள்
ஓடினாலும் களைப்படையார்
நடந்தாலும் சோர்வடையார் -ஆமென்
கண்ணீரின் பாதையில் நடக்கும் போதெல்லாம்
களிப்பான நீரூற்றாய் மாற்றிக் கொள்வார்கள்
வல்லமை மேலே வல்லமை கொண்டு
சீயோனைக் காண்பார்கள் -ஆமென்
வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதை விட
உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது
ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின்
வாசலில் காத்திருப்பேன் – ஆமென்
ஆத்துமா தேவனே உம்மையே நோக்கி
ஆர்வமுடன் கதறுகின்றது
உள்ளமும் உடலும் ஒவ்வொருநாளும்
கெம்பீரித்து சத்தமிடுது – ஆமென்