ஆவியில் ஜெபம் செய்ய
Christian Song Lyrics
TamilPallavi
Aaviyil Jebam seyyap pelan thaarum suvaami!
Ataikkalam enakku vaerillai thaevaavi!
Saranangal
1. Thaevaavi arulmaari emmaelanuppa
Thaevaa jeyiththida pelan vaenndum suvaami! – aavi
2. Mulu ullam karaiththu en ithayaththilirunthu
Suluvaaka vasanangal suranthidach seyyum – aavi
3. Vanjaka vasanaththaal irulataiyaamal
Nenjam ummil saarnthu arul perach seyyum – aavi
4. Pelanatta aelaikkup pelan thaarum suvaami,
Nalamaaka naavai neer maattidum suvaami – aavi
5. Jebam seyya vaayai neer thotdidum suvaami,
Jeyam pera vakai vitham karpiyum suvaami – aavi
6. Yesuvin iraththaththaal ithayaththaik kaluvi
Naesari naaviyaa lorumikkach seyyum – aavi
பல்லவி
ஆவியில் ஜெபம் செய்யப் பெலன் தாரும் சுவாமி!
அடைக்கலம் எனக்கு வேறில்லை தேவாவி!
சரணங்கள்
1. தேவாவி அருள்மாரி எம்மேலனுப்ப
தேவா ஜெயித்திட பெலன் வேண்டும் சுவாமி! – ஆவி
2. முழு உள்ளம் கரைத்து என் இதயத்திலிருந்து
சுளுவாக வசனங்கள் சுரந்திடச் செய்யும் – ஆவி
3. வஞ்சக வசனத்தால் இருளடையாமல்
நெஞ்சம் உம்மில் சார்ந்து அருள் பெறச் செய்யும் – ஆவி
4. பெலனற்ற ஏழைக்குப் பெலன் தாரும் சுவாமி,
நலமாக நாவை நீர் மாற்றிடும் சுவாமி – ஆவி
5. ஜெபம் செய்ய வாயை நீர் தொட்டிடும் சுவாமி,
ஜெயம் பெற வகை விதம் கற்பியும் சுவாமி – ஆவி
6. இயேசுவின் இரத்தத்தால் இதயத்தைக் கழுவி
நேசரி னாவியா லொருமிக்கச் செய்யும் – ஆவி