ஆவியை அருளுமே சுவாமீ எனக்
Christian Song Lyrics
TamilAaviyai arulumae, suvaamee, – enak
Kaayur koduththa vaanaththinarase!
1.narkani thaetivarung kaalanga lallavo?
Naanoru kaniyatta paalmara mallavo?
Murkani mukangaannaa vempayi rallavo?
Mulunenjam vilaivatta uvarnila mallavo? – aaviyai
2.paavikku aaviyin kaniyenunj sinaekam,
Parama santhosham, neetiya saantham,
Thaeva samaathaanam, narkunam, thayavu,
Thida visuvaasam sirithenumillai – aaviyai
3.theepaththuk kennnneyaich seekkiram oottaுm@
Thiri yaviyaamalae theenntiyae yaettaுm,
Paava asoosangal vilakkiyae maattaுm,
Parisuththavaran thanthen kuraikalaith theerum – aaviyai
ஆவியை அருளுமே, சுவாமீ, – எனக்
காயுர் கொடுத்த வானத்தினரசே!
1.நற்கனி தேடிவருங் காலங்க ளல்லவோ?
நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ?
முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ?
முழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ? – ஆவியை
2.பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்,
பரம சந்தோஷம், நீடிய சாந்தம்,
தேவ சமாதானம், நற்குணம், தயவு,
திட விசுவாசம் சிறிதெனுமில்லை – ஆவியை
3.தீபத்துக் கெண்ணெயைச் சீக்கிரம் ஊற்றும்@
திரி யவியாமலே தீண்டியே யேற்றும்,