ஆனந்தமே! ஜெயா! ஜெயா!
Christian Song Lyrics
TamilAananthamae! Jeyaa! Jeyaa!
Akamakilnthanaivarum paadiduvom
Njaanaratchakar, naathar namai-intha
Naalvarai njaalamathinil kaaththaar
Sangu kanam, valar sengaோlarasivai
Thalaraathula kiristhaanavaraam,
Engal ratchakaraesu namai-veku
Irakkang kirupaiyudan ratchiththathaal
Munthu varuda mathinil manudaril veku
Mosakasthikal thanilaeyulala
Thanthu namakkuyirutaiyu vekunavum
Thayavudan yaesu tharkaaththathinaal
Panjampasikkum pattayaththukkum veku kodum
Paal kollai Nnoy vishathoshaththirkum
Thanjaratchakar thavirththu namai-ith
Tharaithanil kurai thanniththaattiyathaal
ஆனந்தமே! ஜெயா! ஜெயா!
அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்
ஞானரட்சகர், நாதர் நமை-இந்த
நாள்வரை ஞாலமதினில் காத்தார்
சங்கு கனம், வளர் செங்கோலரசிவை
தளராதுள கிறிஸ்தானவராம்,
எங்கள் ரட்சகரேசு நமை-வெகு
இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால்
முந்து வருட மதினில் மனுடரில் வெகு
மோசகஸ்திகள் தனிலேயுழல
தந்து நமக்குயிருடையு வெகுணவும்
தயவுடன் யேசு தற்காத்ததினால்
பஞ்சம்பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும்
பாழ் கொள்ளை நோய் விஷதோஷத்திற்கும்
தஞ்சரட்சகர் தவிர்த்து நமை-இத்
தரைதனில் குறை தணித்தாற்றியதால்