வாரீரோ வினை திரீரோ
Christian Song Lyrics
TamilVaareero vinai thireero
Pallavi
Vaareero? Vinai theereero? Enaik
Kaareero? Jeevan thaareero, yaesu
Anupallavi
Vaaraenenteer, varan thaaraenenteer, suvaamee;
Paarinilae yenakku yaarumillai, thunnaikku. – vaareero
Saranangal
1. Thaenae, marimakanae, thaeti maraுkung[1] konae,
Senaikalin seemonae, sinthai kalangi naanae
Kaanakamae maevum maanathu polaanaen;
Vaanakam pona thaevaa, aeno varath thaamatham? – vaareero
2. Atta thikkengu mennaith thuttap paasaasuk koottam
Ittap paduththavallo kitta valaiyathu, paar
Aduththaalo, ampaith thoduththaalo enna!
Adupataiyaaka nintu thadu patai[2] seyveer, yaesu, – vaareero
3. Kaannaatha aattaைth thaetik kaadengum senta kon neer
Kanndu pitiththa aattaைk konndu tholuvanj serkkak
Karuththudanae mika uriththudanae iru
Karaththilaenthi valap puraththil vaippeer thinnnam. – vaareero
4. Veedu enakkuch seyya maelokam pona thaevaa,
Kooda iruththi vaikkak kooppida vaaraேnenteer;
Konndu varuveer muti, nintu varuveer noti;
Kanndu makilvaen, kooti nintu pukalvaen keti. – vaareero
வாரீரோ வினை திரீரோ
பல்லவி
வாரீரோ? வினை தீரீரோ? எனைக்
காரீரோ? ஜீவன் தாரீரோ, யேசு
அனுபல்லவி
வாரேனென்றீர், வரந் தாரேனென்றீர், சுவாமீ;
பாரினிலே யெனக்கு யாருமில்லை, துணைக்கு. – வாரீரோ
சரணங்கள்
1. தேனே, மரிமகனே, தேடி மறுகுங்[1] கோனே,
சேனைகளின் சீமோனே, சிந்தை கலங்கி நானே
கானகமே மேவும் மானது போலானேன்;
வானகம் போன தேவா, ஏனோ வரத் தாமதம்? – வாரீரோ
2. அட்ட திக்கெங்கு மென்னைத் துட்டப் பாசாசுக் கூட்டம்
இட்டப் படுத்தவல்லோ கிட்ட வளையது, பார்
அடுத்தாலோ, அம்பைத் தொடுத்தாலோ என்ன!
அடுபடையாக நின்று தடு படை[2] செய்வீர், யேசு, – வாரீரோ
3. காணாத ஆட்டைத் தேடிக் காடெங்கும் சென்ற கோன் நீர்
கண்டு பிடித்த ஆட்டைக் கொண்டு தொழுவஞ் சேர்க்கக்
கருத்துடனே மிக உரித்துடனே இரு
கரத்திலேந்தி வலப் புறத்தில் வைப்பீர் திண்ணம். – வாரீரோ
4. வீடு எனக்குச் செய்ய மேலோகம் போன தேவா,
கூட இருத்தி வைக்கக் கூப்பிட வாறேனென்றீர்;
கொண்டு வருவீர் முடி, நின்று வருவீர் நொடி;