நாதன் வேதம் என்றும்
Christian Song Lyrics
Tamil1. Naathan vaetham entum
Engal vali kaattum;
Athai nampuvorkkum
Makil oli veesum.
2. Aaraுthalin vaetham,
Meetpin Suvisesham,
Saththuru kittumpothum
Payam muttaுm neekkum.
3. Pusal, alai mothin,
Maekam irul mootin,
Vaetham oli veesum,
Kshaema vali serkkum.
4. Vaakkukketta inpam,
Ennnnillaatha selvam,
Paethai maanidarkkum
Theyva vaarththai eeyum.
5. Jeevanullamattum
Vaetham pelan tharum;
Saavu varumpothum
Vaetham aattith thaettaுm.
6. Naathaa, unthan vaakkai
Kattaுnarnthu, ummai
Naesiththatiyaarum
Entum pattach seyyum
1. நாதன் வேதம் என்றும்
எங்கள் வழி காட்டும்;
அதை நம்புவோர்க்கும்
மகிழ் ஒளி வீசும்.
2. ஆறுதலின் வேதம்,
மீட்பின் சுவிசேஷம்,
சத்துரு கிட்டும்போதும்
பயம் முற்றும் நீக்கும்.
3. புசல், அலை மோதின்,
மேகம் இருள் மூடின்,
வேதம் ஒளி வீசும்,
க்ஷேம வழி சேர்க்கும்.
4. வாக்குக்கெட்டா இன்பம்,
எண்ணில்லாத செல்வம்,
பேதை மானிடர்க்கும்
தெய்வ வார்த்தை ஈயும்.
5. ஜீவனுள்ளமட்டும்
வேதம் பெலன் தரும்;
சாவு வரும்போதும்
வேதம் ஆற்றித் தேற்றும்.
6. நாதா, உந்தன் வாக்கை
கற்றுணர்ந்து, உம்மை
நேசித்தடியாரும்
என்றும் பற்றச் செய்யும்