நீ செய்த நன்மை நினைக்கின்றேன் என்
Christian Song Lyrics
TamilNee seytha nanmai ninaikkinten – en
Nenjuruka nanti solkinten
Iraivaa iraivaa iraivaa iraivaa
Unntida unavum utaiyumae koduththu
Oru kuraiyintik kaaththu vanthaay – oru
Annaiyaip polavae anpinaip polinthu
Allalkal yaavaiyum theerththu vaiththaay
Malarukkup pathilaay kalaiyengum thonti
Manathinai nirapputhal paarththirunthaay – udan
Ularattum ente othungi vidaamal
Kalaikalai akattik kaaththu vanthaay
நீ செய்த நன்மை நினைக்கின்றேன் – என்
நெஞ்சுருக நன்றி சொல்கின்றேன்
இறைவா இறைவா இறைவா இறைவா
உண்டிட உணவும் உடையுமே கொடுத்து
ஒரு குறையின்றிக் காத்து வந்தாய் – ஒரு
அன்னையைப் போலவே அன்பினைப் பொழிந்து
அல்லல்கள் யாவையும் தீர்த்து வைத்தாய்
மலருக்குப் பதிலாய் களையெங்கும் தோன்றி
மனதினை நிரப்புதல் பார்த்திருந்தாய் – உடன்
உலரட்டும் என்றே ஒதுங்கி விடாமல்
களைகளை அகற்றிக் காத்து வந்தாய்