இயேசு அருள் நாதனே
Christian Song Lyrics
TamilPallavi
Yesu arul naathanae!
Thaasan maelunnaavi yoottath thaal panninthaenae!
Kannnnikal
1. Maasatta um iraththaththaalen manam suththiseyyumaen!
Naesarae um nijaroopam naeril kaanach seyyumaen!
Neesan manam maarinathaal paasamennil koorumaen! – Yesu
2. Ummodu siluvaiyi lontayaraiyappattaேnae!
Immaiyilumaip pirinthu irukkavumaattaேnae!
Thammaiyallaamal ontu minthath thaaranniyil vaenntaenae! – Yesu
3. Thanninthidaath thaakamenil thaameluppi vaiyeero?
Pannintha ennullaththil neer vanthu palli kolleero
Thunninthu vantha ennodu thooyaa vaasanj seyyeero? – Yesu
4. Enathu siththa manaiththum umathaayirukkattum!
Thamathu oliyil naanum velichchamae kaanattum!
Thinam Parisuththanaaka umaith thuthi seyyattum! – Yesu
பல்லவி
இயேசு அருள் நாதனே!
தாசன் மேலுன்னாவி யூற்றத் தாள் பணிந்தேனே!
கண்ணிகள்
1. மாசற்ற உம் இரத்தத்தாலென் மனம் சுத்திசெய்யுமேன்!
நேசரே உம் நிஜரூபம் நேரில் காணச் செய்யுமேன்!
நீசன் மனம் மாறினதால் பாசமென்னில் கூருமேன்! – இயேசு
2. உம்மோடு சிலுவையி லொன்றாயறையப்பட்டேனே!
இம்மையிலுமைப் பிரிந்து இருக்கவுமாட்டேனே!
தம்மையல்லாமல் ஒன்று மிந்தத் தாரணியில் வேண்டேனே! – இயேசு
3. தணிந்திடாத் தாகமெனில் தாமெழுப்பி வையீரோ?
பணிந்த என்னுள்ளத்தில் நீர் வந்து பள்ளி கொள்ளீரோ
துணிந்து வந்த என்னோடு தூயா வாசஞ் செய்யீரோ? – இயேசு
4. எனது சித்த மனைத்தும் உமதாயிருக்கட்டும்!
தமது ஒளியில் நானும் வெளிச்சமே காணட்டும்!
தினம் பரிசுத்தனாக உமைத் துதி செய்யட்டும்! – இயேசு