குணப்படு பாவி தேவ
Christian Song Lyrics
TamilKunappadu paavi, thaeva
Kopam varum maevi – ippo
Anupallavi
Kanappoluthinil kaayam marainthupom
Kaalamirukkaiyil seelamathaaka nee
Saranangal
(New Version )
Vaethaththil un thanai paar – antha
Vaetha vithippati naer
Neethiyai seythavanaar?- thooya
Ninmalan vaakka tho koor;
Theethuraுm paaviyin theemaiyarinthukol;
Naathan Kristhu ippothae uraikkiraar.
1. Karththanai nee maranthaay – avar
Karpanaiyaith thuranthaay,
Pakthiyinmai therinthaay – pollaap
Paava vali thirinthaay,
Puththiketta aattuk kuttiyae oti vaa,
Uththama maeyppanaar kaththi yalaikkiraar
2. Thukkamataiyaayo? Paavi
Thuyaramaakaayo?
Mikkap pulampaayo? – manam
Melinthurukaayo?
Ikkanam paavak kasappai yunaraayo?
Thakka arumaraip pakkan thodaraayo?
3. Thaavee tharasanaippol – thannaith
Thaalththum manaaseyaippol
Paavi manushiyaippol – manam
Pathaiththa paethurupol,
Thaevanukkaerkaatha theemaiseythaenentu
Koovip pulampu nal aaviyin sorpati
குணப்படு பாவி, தேவ
கோபம் வரும் மேவி – இப்போ
அனுபல்லவி
கணப்பொழுதினில் காயம் மறைந்துபோம்
காலமிருக்கையில் சீலமதாக நீ
சரணங்கள்
(New Version )
வேதத்தில் உன் தனை பார் – அந்த
வேத விதிப்படி நேர்
நீதியை செய்தவனார்?- தூய
நின்மலன் வாக்க தோ கூர்;
தீதுறும் பாவியின் தீமையறிந்துகொள்;
நாதன் கிறிஸ்து இப்போதே உரைக்கிறார்.
1. கர்த்தனை நீ மறந்தாய் – அவர்
கற்பனையைத் துறந்தாய்,
பக்தியின்மை தெரிந்தாய் – பொல்லாப்
பாவ வழி திரிந்தாய்,
புத்திகெட்ட ஆட்டுக் குட்டியே ஓடி வா,
உத்தம மேய்ப்பனார் கத்தி யழைக்கிறார்
2. துக்கமடையாயோ? பாவி
துயரமாகாயோ?
மிக்கப் புலம்பாயோ? – மனம்
மெலிந்துருகாயோ?
இக்கணம் பாவக் கசப்பை யுணராயோ?
தக்க அருமறைப் பக்கந் தொடராயோ?