கூர் ஆணி தேகம் பாய
Christian Song Lyrics
Tamil1. Koor aanni thaekam paaya
Maa vaethanaip pattar;
’pithaavae, ivarkatku
Mannippeeyum’ entar.
2. Tham raththam sinthinorai
Nal meetpar ninthiyaar;
Maa theyva naesaththodu
Ivvaaraு jepiththaar.
3. Enakkae avvurukkam
Enakkae achchepam;
Avvitha mannippaiyae
Enakkum arulum.
4. Neer siluvaiyil saaka
Seythathen akanthai;
Kadaavinaen, Yesuvae
Naanum koor aanniyai.
5. Um saanthak kanntithaththai
Naan niththam ikalnthaen;
Enakkum mannippeeyum,
Ennnnaamal naan seythaen.
6. Aa, inpa naesa aali!
Aa, thivviya urukkam!
Ninthippor ariyaamal
Sey paavam manniyum.
1. கூர் ஆணி தேகம் பாய
மா வேதனைப் பட்டார்;
’பிதாவே, இவர்கட்கு
மன்னிப்பீயும்’ என்றார்.
2. தம் ரத்தம் சிந்தினோரை
நல் மீட்பர் நிந்தியார்;
மா தெய்வ நேசத்தோடு
இவ்வாறு ஜெபித்தார்.
3. எனக்கே அவ்வுருக்கம்
எனக்கே அச்செபம்;
அவ்வித மன்னிப்பையே
எனக்கும் அருளும்.
4. நீர் சிலுவையில் சாக
செய்ததென் அகந்தை;
கடாவினேன், இயேசுவே
நானும் கூர் ஆணியை.
5. உம் சாந்தக் கண்டிதத்தை
நான் நித்தம் இகழ்ந்தேன்;
எனக்கும் மன்னிப்பீயும்,
எண்ணாமல் நான் செய்தேன்.
6. ஆ, இன்ப நேச ஆழி!
ஆ, திவ்விய உருக்கம்!
நிந்திப்போர் அறியாமல்
செய் பாவம் மன்னியும்.