பாலரே ஓர் நேசர்
Christian Song Lyrics
Tamil1. Paalarae or naesar unndu
Vinn motcha veettilae
Neengaa innaesar anpu
Or naalum kuntathae;
Uttaாrin naesam yaavum
Naal sella maarinum,
Ivvanpar thivviya naesam
Maaraamal nilaikkum.
2. Paalarae, or veedu unndu
Vinn motcha naattilae
Paer vaalvunndaaka Yesu
Angarasaalvaarae;
Oppatta antha veettaை
Naam naada vaenndaamo?
Angullor inpa vaalvil
Or thaalchchithaanunntoo?
3. Paalarae or kireedam unndu
Vinn motcha veettil neer
Nal meetparin paeranpaal
Por kireedam anniveer;
Ippothu meetpaip pettaு
Maa naesar pinsentar,
Ivvaadaa jeeva kireedam
Appothu sooduvaar.
4. Paalarae, or geetham unndu
Vinn motcha veettilae;
Maa jeya geetham paada
Or veennaiyum unntae ;
Annaattin inpam ellaam
Nam meetparkkurimai,
Neer avaridam vaarum,
Eevaar avvinpaththai.
1. பாலரே ஓர் நேசர் உண்டு
விண் மோட்ச வீட்டிலே
நீங்கா இந்நேசர் அன்பு
ஓர் நாளும் குன்றாதே;
உற்றாரின் நேசம் யாவும்
நாள் செல்ல மாறினும்,
இவ்வன்பர் திவ்விய நேசம்
மாறாமல் நிலைக்கும்.
2. பாலரே, ஓர் வீடு உண்டு
விண் மோட்ச நாட்டிலே
பேர் வாழ்வுண்டாக இயேசு
அங்கரசாள்வாரே;
ஒப்பற்ற அந்த வீட்டை
நாம் நாட வேண்டாமோ?
அங்குள்ளோர் இன்ப வாழ்வில்
ஓர் தாழ்ச்சிதானுண்டோ?
3. பாலரே ஓர் கிரீடம் உண்டு
விண் மோட்ச வீட்டில் நீர்
நல் மீட்பரின் பேரன்பால்
பொற் கிரீடம் அணிவீர்;
இப்போது மீட்பைப் பெற்று
மா நேசர் பின்சென்றார்,
இவ்வாடா ஜீவ கிரீடம்
அப்போது சூடுவார்.
4. பாலரே, ஓர் கீதம் உண்டு