பகல்நேரப் பாடல் நீரே
Christian Song Lyrics
TamilPakalnaerap paadal neerae
Iravellaam kanavu neerae
Maelaana santhosham neerae
Naalellaam umaip paaduvaen en
Erusalaemae unai maranthaal
Valakkaram seyal ilakkum
Makilchchiyin makudamaay karuthaavitil
Naavu ottik kollum en
Makilchchiyin makudam neerthaanaiyyaa
En manavaalarae umai maravaen
Kavalaikal peruki kalangumpothu
Makilviththeer um anpinaal
Kaalkal saraுkki thadumaaraுm pothu
Thaangineer kirupaiyinaal en
Thaaymati thavalum kulanthaipola
Makilchchiyaay irukkinten
Ippothum eppothum nampiyullaen
Ummaiyae nampiyullaen makilchchi
Paarvaiyil serukku enakkillai
Iraுmaappu ullaththil entumillai
Payanatta ulakaththin seyalkalilae
Pangu peraுvathillai
பகல்நேரப் பாடல் நீரே
இரவெல்லாம் கனவு நீரே
மேலான சந்தோஷம் நீரே
நாளெல்லாம் உமைப் பாடுவேன் என்
எருசலேமே உனை மறந்தால்
வலக்கரம் செயல் இழக்கும்
மகிழ்ச்சியின் மகுடமாய் கருதாவிடில்
நாவு ஒட்டிக் கொள்ளும் என்
மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யா
என் மணவாளரே உமை மறவேன்
கவலைகள் பெருகி கலங்கும்போது
மகிழ்வித்தீர் உம் அன்பினால்
கால்கள் சறுக்கி தடுமாறும் போது
தாங்கினீர் கிருபையினால் என்
தாய்மடி தவழும் குழந்தைபோல
மகிழ்ச்சியாய் இருக்கின்றேன்
இப்போதும் எப்போதும் நம்பியுள்ளேன்
உம்மையே நம்பியுள்ளேன் மகிழ்ச்சி
பார்வையில் செருக்கு எனக்கில்லை
இறுமாப்பு உள்ளத்தில் என்றுமில்லை
பயனற்ற உலகத்தின் செயல்களிலே
பங்கு பெறுவதில்லை